தூய லூர்து அன்னை புதிய ஆலய கட்டுமான பணிக்கான செபம்

மகிமைநிறை தூய லூர்து அன்னை புதிய ஆலய
கட்டுமான பணிக்கான ஜெபம்

எங்கள் தாயும் தந்தையுமான இறைவா/ உம்மை போற்றுகின்றோம் / புகழ்கின்றோம் / உமது மேலான அருளுதவியை எண்ணி/நன்றி நவில்கின்றோம். இந்த இடத்தில் நான் நலன் நல்குவேன் (ஆகாய் 2:9) என்று / இம்மாடம்பாக்கம் ஆலயத்திலிருந்து /இத்தனை ஆண்டுகளாக /எம் குடும்பங்களையும் / உமது ஆலயம் நோக்கி வருவோரையும்/நிறைவாக ஆசீர்வதித்ததற்காக/ உம்மை ஆராதிக்கின்றோம்.

உம்முடைய/ இந்த புதிய ஆலய கட்டுமான பணிக்காக/நாங்கள் ஏறெடுக்கும் முயற்சியை /உம் வல்லமையினால் ஆசீர்வதியும். /இப்பணிக்கு தேவையான /பொருளுதவியையும்/ உபகாரிகளின் தாராள உள்ளத்தையும் தந்து /வழிநடத்தும். /இக்கட்டுமான பணிக்காக உழைக்க/ சிறந்த பணியாளர்களையும்/அப்பணியாளர்களுக்கு போதுமான/ பாதுகாப்பையும் கொடுத்து உதவியருளும்.

தூய லூர்து அன்னையே /எங்கள் தாயே/ உம் புதிய ஆலய கட்டுமான பணியில்/ எங்களோடு உடனிருந்து /எமக்காக உம் திருமகனிடம் /பரிந்து பேசும் அன்னையே.

இக்கோவிலின்/ முன்னைய மாட்சியைவிடப் /பின்னைய மாட்சி /மிகுதியாய் இருக்கும்/ (ஆகாய் 2:9) என்பதை நம்பிக்கையோடு எதிர்நோக்கி /இப்பணியை நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்திட/எங்கள் ஆண்டவராகிய/ கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். /ஆமென்.

மாடம்பாக்கம் மகிமைநிறை புனித லூர்து அன்னையே!

எங்கள் மீது இரக்கமாயிரும்!